பீகார் தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றால் நாட்டின் முதலாவது இளம் வயது முதல்வர் தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றால் மாநிலங்களில் முதலாவது இளம் வயது முதல்வர் என்ற பெருமையைப் பெறுவார் தேஜஸ்வி யாதவ்.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இறுதிகட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகள் பெரும்பாலும், ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவே வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளன. அனைத்து முடிவுகளையும் ஒப்பிட்டால் சராசரியாக 133 இடங்களில் ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகள் அணி வெல்லக் கூடும். பீகாரில் 122 இடங்கள்தான் பெரும்பான்மைக்கு தேவை.
அப்படி ஆர்ஜேடி - காங்கிரஸ்- இடதுசாரி அணி வெற்றி பெற்றால் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரின் முதல்வராவார். நாட்டின் மாநிலங்களில் முதல் முறையாக இளம் வயதில் அதாவது 31 வயதில் முதல்வராகும் பெருமைக்குரியவராவார் தேஜஸ்வி யாதவ்.
இளைஞர்கள் ஓட்டுக்களை காந்தம்போல இழுத்த தேஜஸ்வி.. பீகாரில் மாறிய டிரெண்ட்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
1967-ல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக 29 வயதில் பதவி ஏற்றார் எம்.ஓ.எச். பரூக். அது யூனியன் பிரதேசம். மாநிலங்களில் பீகாரில் 1968-ல் 32 வயதில் முதல்வரானார் சதீஷ் பிரசாத் சிங். பின்னர் 1975-ல் பீகார் முதல்வராக 35 வயதில் பதவியேற்றார் ஜெகநாத் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.