பீகாரில் தொங்கு சட்டசபை உருவானால் சிராக் பாஸ்வான் 'கிங் மேக்கர்'?
பாட்னா: பீகாரில் தொங்கு சட்டசபை உருவானால் லோக் ஜனசக்தித் தலைவர் சிராக் பாஸ்வான் கிங் மேக்கராக உருவாகலாம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் ஆர்ஜேடி-காங். கூட்டணி அரசு அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்பிருப்பதாகவும் சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
243 இடங்களைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கும், ஜேடியூ-பாஜக கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு ஒரு சில இடங்கள் தேவைப்படும் நிலைமை உருவாகலாம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
அப்படி ஒரு நிலை உருவானால் 1 முதல் அதிகபட்சம் 8 இடங்களைப் பெறலாம் என கணிக்கப்படும் லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் கிங் மேக்கராகும் நிலைமை உருவாகும். ஜேடியூவை எதிர்த்து போட்டியிட்டு நிதிஷ்குமாரின் சகாப்தத்தையே காலி செய்யும் முடிவில் களமாடியவர் சிராக் பாஸ்வான்.
அதேநேரத்தில் பாஜக ஆட்சி அமைக்க உதவுவேன் எனவும் கூறியிருக்கிறார். ஆகையால் மீண்டும் ஜேடியூ-பாஜக அணிக்கே சிராக் பாஸ்வான் ஆதரவு தருவாரா? அல்லது ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகளுக்கு ஆதரவை தெரிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் பீகாரில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications