பீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்
பாட்னா: பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் சட்டசபைக்கு வரும் 28-ந் தேதி முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

புதிய வாக்காளர்கள்
இந்த தேர்தலில் இளம் தலைமுறை புதிய வாக்காளர்கள் 50% குறைவாக இருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2015 சட்டசபை தேர்தலில் மொத்தம் 24.13 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தனர்.

கடந்த தேர்தலுடன் ஒப்பீடு
ஆனால் தற்போதைய தேர்தலில் 11.17 லட்சம் பேர்தான் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திருக்கின்றனர். 30வயதுக்கும் குறைவான வாக்காளர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2015-ல் 2.04 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 1.79 கோடியாக குறைந்துள்ளது.

லாக்டவுன் காரணம்
இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், வாக்காளராக பதிவு செய்வதற்கு முன்னர் மக்களிடத்தில் இது தொடர்பாக தீவிர பிரசாரங்கள் கொண்டு சேர்க்கப்படும். ஆனால் இம்முறை லாக்டவுன் காலம் என்பதால் அத்தகைய பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் ஒரு காரணம் என்கின்றனர்.

கட்சிகள் அசால்ட்
இத்தனைக்கும் இந்த தேர்தலில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்துதான் பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதும் புதிய வாக்காளர்களை பதிவு செய்வதில் கட்சிகள் அனைத்துமே கோட்டைவிட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications