Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாட்னாவில் “பக்கா” பிளான்.. பாஜகவை வீழ்த்த கூடும் கட்சிகள்! ஸ்டாலினின் அட்வைஸ் - தலையசைத்த நிதீஷ்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: முதலமைச்சர் முக ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சிகளின் மாநாட்டை ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க நிதீஷ் குமார் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஆட்சிகாலம் நிறைவடைய இன்னும் ஓராண்டே மீதம் இருக்கிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே இறங்கி இருக்கின்றன.

Nitish Kumar accepted the postponing of Patna opposition meeting aftre Stalin advice

மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் எதிர்க்கட்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை இணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒரே அணியாக போட்டியிட வைக்க ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் இதே விசயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இதே முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இதை முழு மூச்சாக செய்து வருபவர் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்தான்.

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த பிறகு அவர் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற நிதீஷ் குமார் எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து பேசி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அதேபோல் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி தலைவர் பத்ருதீன் அஜ்மல் ஆகியோரையும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற நிதிஷ் குமார் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் தேஜஸ்வி யாதவும் சென்று உள்ளார். இதேபோல் அண்மையில் அர்விந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மானும் சென்னைக்கு வந்த முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோரையும் நிதீஷ் குமார் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 20 ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி கோட்டத்தை நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார் நிதீஷ் குமார். ஜூன் 12 ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தை தள்ளி வைக்குமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டு உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினும் தள்ளி வைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜூன் 23 ஆம் தேதி கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் நிதீஷ் குமார் கேட்டுள்ளாராம். அதே நேரம் கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்பாமல் தலைவர்களே இதில் பங்கேற்க வேண்டும் என நிதீஷ் குமார் சொல்லி இருக்கிறார். இந்த நாள் உறுதி செய்யப்பட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பாட்னாவுக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+