வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி
Recommended Video

பாட்னா: வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முதல் முறையாக பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது பாஜகவிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட நிலையில், பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜமுய் மாவட்டத்தில் எல்.ஜே.பி வேட்பாளர் சிராக் பஸ்வானை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்தார்.
நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் போது பேசியதாவது: எனது தலைமையிலான மத்திய அரசு, எங்களால் சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லைதான்.

70 வருஷம் இருந்தாங்களே
70 வருடங்களாக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அவர்களால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூற முடியவில்லை. எங்கள் அரசு வெறும் 5 வருடங்கள்தான் ஆட்சியில் உள்ளது. பிறகு எப்படி முழு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும். இருப்பினும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்.

இட ஒதுக்கீடு இருக்கும்
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு முடிவுக்கு கொண்டுவந்துவிடும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. நாங்கள் இட ஒதுக்கீட்டில் கை வைக்கவே மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சவுக்கிதார் டிரெண்ட்
பிரதமர் தனது 28 நிமிட பேச்சில், 23 முறை சவுகிதார் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாதுகாவலர் என்ற அர்த்தம் வரும் இந்த வார்த்தைக்கு கூட்டத்தில் வரவேற்பு அதிகம் உள்ளது. மோடி இதை குறிப்பிடும்போது கைத்தட்டல்கள் அதிகமாக உள்ளன.

வேலைவாய்ப்பு
இதேபோல காங்கிரஸ் என்ற வார்த்தையை, 15 முறை நரேந்திர மோடி பயன்படுத்தினார். பாதுகாப்பு படையினர் தொடர்பாக 14 முறை வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆனால், வேலை வாய்ப்பு குறித்தோ, வேலைவாய்ப்பு இன்மை குறித்தோ, நரேந்திர மோடி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications