ரயிலில் சார்ஜ் பாயிண்ட்டில் கெட்டில் வைத்து வெந்நீர் போட்ட இளைஞர்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம்
பாட்னா: பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்ற ரயிலில் சார்ஜிங் பாயிண்டில் கெட்டில் பயன்படுத்தி வெந்நீர் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் மாநிலம் கயாவில் இருந்து புதுடெல்லி்க்கு மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் லே பகுதியை சேர்ந்த 36 வயது நபர் பயணம் செய்து கொண்டு இருந்தார். ரயிலில் வயதான பயணி ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்காக சுடு தண்ணீர் கிடைக்குமா என கேட்டதாக தெரிகிறது. இதனால், அவருக்கு உதவும் நோக்கில் லே பகுதியை சேர்ந்த நபர் தன்னிடம் இருக்கு எலக்ட்ரானிக் கெட்டிலை பயன்படுத்தி சுடு தண்ணீர் போட்டு கொடுத்துள்ளார்.

இது ரயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த நபர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 147 கீழ் வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அந்த நபருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கையுடன் மாஜிஸ்திரேட்டு விடுவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், " ரயிலில் சார்ஜிங் பாயிண்ட்களில் செல்போன்கள் மட்டுமே சார்ஜ் செய்யலாம்.
அதைவிடுத்து மின்சாரத்தை இழுக்கும் மின் சாதனங்களை பயன்படுத்தினால் மின்கசிவு ஏற்பட்டு ரயிலில் தீ விபத்து உள்பட பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சம்பார்க் கரந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சிலர் குளிர் காய்வதற்காக மாட்டு சாணத்தை கொண்டு தீ மூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் ரயிலுக்குள் தீ முட்டி குளிர் காயந்த இரு பயணிகளையும் அலிகார் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அந்த பயணிகள் இருவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து.
அண்மைக்காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பயணிகள் பொறுப்பற்ற முறையில் அஜாக்கிரதையாக நடந்து கொள்வது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications