கொரோனாவில் மீண்டவர்களுக்கு...நுரையீரல் பாதிப்பு...அதிர்ச்சி தகவல்!!
பாட்னா: பீகாரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு நுரையீரல் திசுக்கள் பாதிப்படைந்து, மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டு, தொடர் இருமல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ்- பி மருத்துவமனையின் மருத்துவர் சஞ்சீவ் குமார் கூறுகையில், ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களில் 100 பேர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். இவர்களுக்கு தொடர் இருமல் இருப்பதாகவும், மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதாகாவும் தெரிவித்தனர். இவர்களுக்கு கொரோனாவுக்கு பிந்தைய நுரையீரல் பாதிப்பாக ''லங் ஃபைப்ரோசிஸ்'' ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுரையீரலின் திசுக்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இது கொரோனா நோயில் இருந்து குணமடைந்து மீள்பவர்களுக்கு இருக்கும் அடுத்தகட்ட உடல் பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பினால், நுரையீரல் திசுக்கள் கடினமாகி, மூச்சுவிடுதலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சில சமயம் ஆக்சிஜனும் தேவைப்படுகிறது. இதை மருந்துகளால் குணப்படுத்தலாம். ஆனால், ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்தவர்களுக்கு இந்த சிக்கல் எழும்போது சிகிச்சையில் தாமதம் ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 25 முதல் 30% பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற உடல் உபாதைகளை தவிர்க்க வேண்டுமானால், கொரோனா தொற்று நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் சமரேந்திர ஜா கூறுகையில், ''கொரோனா தொற்று ஏற்பட்டபோது, மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இதுமாதிரியான தொந்தரவுகள் ஏற்படலாம். இது பாட்னாவில் மட்டுமில்லை. நாடு முழுவதும் இந்த பாதிப்பு இருப்பதாக எனது நண்பர்களிடம் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. தற்போது குறைந்த எண்ணிக்கையில் இந்த பாதிப்பால் மருத்துவமனைக்கு வந்து கொண்டுள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம்.
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்போது, அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம். இந்த பாதிப்புக்கு நுரையீரல் புற்று நோய்க்கு கொடுக்கப்படும், மருந்தையே கொடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அறிகுறி அறிந்தவுடன், விட்டமின் சி, ஜிங்க் சத்து மருந்துகளை துவக்கத்தில் இருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா நோயில் இருந்து குணமடைந்த பின்னர் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து இது நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications