பீகார் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தார் பிரசாந்த் கிஷோர்! தொகுதி இதுதான்
பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. அதன் தலைவராக இருக்கும் நிதிஷ்குமார், பீகார் முதல்வராக தொடர்கிறார். இக்கட்சி, தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால், காங்கிரஸ் நிதிஷ்குமார் ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

முன்னதாக இது குறித்து பேசியிருந்த பிசாந்த் கிஷோர், "நிதிஷ் குமார் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நிச்சயமாக போட்டியிடுவேன். ஒருவேளை அதற்கு எனது கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட தயாராக இருக்கிறேன். 35 பேர் கொண்ட கட்சி குழுதான் யார் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்யும். என்னைப் பற்றியும் அவர்களே முடிவு செய்வார்கள்.
ஒருவர் தனது கர்மபூமியில் (பணிபுரியும் இடம்) அல்லது ஜன்மபூமியில் (பிறந்த இடம்) இருந்துதான் போட்டியிட வேண்டும். ஆகையால், ஜன்மபூமி கருத்தில் கொள்ளப்பட்டால், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராமின் கார்காஹர் தொகுதியில் இருந்துதான் போட்டியிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த தொகுதியில் தான் போட்டியிடப்போவது உறுதி என்று தற்போது கூறியுள்ளார்.
கார்காஹர் சட்டமன்றத் தொகுதியில் கிசோர் சார்ந்த உயர் சாதி பிராமண வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சந்தோஷ் குமார் மிஸ்ரா, ஜனதா தளம்-யுனைடெட் (JD-U) கட்சியின் பஷிஸ்ட் சிங்கை தோற்கடித்து கார்காஹர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் நான்கு தொகுதிகளிலும் ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது, ஆனால் எதிலும் வெற்றி பெறவில்லை. "மொத்த வாக்குகளில் 10% எங்களுக்கு கிடைத்தது, இது எங்களைப் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது" என்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கிசோர் கூறியிருந்தார்.
நான்கு தொகுதிகளில் பெலகஞ்ச் மற்றும் ராம்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி வேட்பாளர்களுக்கு ஜன சுராஜ் கட்சி தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த இரண்டு தொகுதிகளும் நீண்ட காலமாக ஆர்ஜேடிக்கு பலமான தொகுதிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications