‛எதுவுமே சரியில்லை’..பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? நிதிஷ் குமார் சொன்ன முக்கிய தகவல்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் வழங்கினார். இதையடுத்து தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரபரப்பான விளக்கமளித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ), லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தனர். ஜேடியூ கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் முதல்வராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி இன்று நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்த நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி விளக்கினார்.
இதுபற்றி நிதிஷ் குமார் கூறுகையில், ‛‛இன்று நான் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனே். மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும்படி ஆளுநரிடம் கூறியுள்ளேன். கூட்டணியில் அனைத்து விஷயங்களும் சரியாக இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒவ்வொருவரிடமும் கருத்துகள் கேட்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது'' எனக்கூறி சென்றார்.
இந்நிலையில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உதவியுடன் இன்று மாலையில் பீகார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதன்பிறகு நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக சார்பில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. தற்போது நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் கூட்டணியை முறித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தும் அவர் வெளியேறி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications