‛எதுவுமே சரியில்லை’..பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? நிதிஷ் குமார் சொன்ன முக்கிய தகவல்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் வழங்கினார். இதையடுத்து தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரபரப்பான விளக்கமளித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ), லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தனர். ஜேடியூ கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் முதல்வராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி இன்று நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்த நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி விளக்கினார்.
இதுபற்றி நிதிஷ் குமார் கூறுகையில், ‛‛இன்று நான் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனே். மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும்படி ஆளுநரிடம் கூறியுள்ளேன். கூட்டணியில் அனைத்து விஷயங்களும் சரியாக இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒவ்வொருவரிடமும் கருத்துகள் கேட்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது'' எனக்கூறி சென்றார்.
இந்நிலையில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உதவியுடன் இன்று மாலையில் பீகார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதன்பிறகு நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக சார்பில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. தற்போது நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் கூட்டணியை முறித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தும் அவர் வெளியேறி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications