பீகாரிகளின் முதுகில் அம்பால் குத்திட்டீங்க.. இனி லாந்தர் பிரகாசமா எரியும்.. நிதிஷ்க்கு லாலு பதிலடி
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சி சின்னம் ஆகியவற்றை சரமாரியாக விமர்சித்து சிறையிலிருந்தபடியே, லாலு பிரசாத் யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் செய்யும் தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம், லாலுவையும் அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். லாலு கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கின் ஆயுள் எப்போதோ முடிந்து விட்டது. தற்போது பீகாரில் அனல் மின்நிலையங்கள் உள்ளன. எனவே இனி லாந்தர் விளக்குக்கெல்லாம் அவசியமில்லை என பேசினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் தற்போது சிறையிலிருந்தபடியே லாலு பிரசாத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சின்னமான அம்பு, வன்முறையின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சியின் லாந்தர் விளக்கு சின்னம் இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்க கூடியது.
எங்கள் சின்னம் ஏழைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தை மலர வைக்கும். லாந்தர் விளக்கு சின்னம் அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்துகிறது. உங்கள் சின்னமான அம்பை பயன்படுத்தி தாமரையில் துளையிடுவதா பாஜகவை எதிர்ப்பதா அல்லது தஞ்சமடைவதா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
பீகார் மக்களின் முதுகில் குத்த தான் நீங்கள் அம்பை பயன்படுத்தியுள்ளீர்கள் எனவே இனி எங்கள் லாந்தர் விளக்குமேலும் பிரகாசமாக எரியும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் வன்முறையின் அடையாமாக திகழும் அம்புவின் ஆயுள் முடிந்து விட்டது. எவ்வளவோ நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட தற்காலத்தில், அம்புக்கெல்லாம் இங்கு வேலை இல்லை.
உங்கள் அம்பை கொண்டு போய் மியூசியத்தில் வைக்க வேண்டியது தான் என கடுமையாக சாடியுள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க குறுக்கு வழியில் செல்லும் உங்களுக்கு கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. ஆனால் நாங்கள் அப்படி அல்ல என லாலு கூறியுள்ளார்,
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications