பியூட்டி "புல்" விநாயகர்.. சபாஷ் போட வைத்த மாணவர்கள்.. புதுச்சேரியில் புதுமை!
Recommended Video
புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், புல்லட் ஓட்டும் விநாயகர், பாகுபலி விநாயகர், ஸ்பைடர் மேன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்து வித்தியாசமான முறையில் ஒருசிலர் வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த வகையில் புதுச்சேரி அருகே உள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, அருகம் புல்லினால் 7 அடி உயரத்திற்கு பசுமை விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

சுற்றுச்சூழல் சீர்கேடு
ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

ஆசிரியர் வழிகாட்டுதல்
இரசாயனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்களது ஓவிய ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதலின்படி இதை செய்துள்ளனர்.

புல் விநாயகர்
பள்ளி வளாகத்தில் இருந்த அருகம் புல் மற்றும் மூங்கில் குச்சிகளை கொண்டு இரண்டரை மணி நேரத்தில் 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

பசுமை விநாயகர்
மாணவர்களின் கற்பனையில் உருவான பசுமை விநாயகர் வலது கையில் எழுது கோலும், இடது கையில் திரிசூலம் என விநாயகரின் வடிவத்தை தத்ரூபமாக காட்டுகிறது.

இயற்கையை காப்போம்
இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், இயற்கயை பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த அருகம் புல் விநாயகர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாராட்டுவோம்
சமீப ஆண்டுகளாக இது போன்று இயற்கையுடன் இணைந்த விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விதை விநாயர் சிலைகளும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதுச்சேரியில் ரூ100 பத்திரம்.. வீட்டு உபயோக பொருள் முதல் ரேஷன் கார்டு வரை கிஃப்ட்! லாபத்தில் மக்கள் -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications