பியூட்டி "புல்" விநாயகர்.. சபாஷ் போட வைத்த மாணவர்கள்.. புதுச்சேரியில் புதுமை!
Recommended Video
புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், புல்லட் ஓட்டும் விநாயகர், பாகுபலி விநாயகர், ஸ்பைடர் மேன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்து வித்தியாசமான முறையில் ஒருசிலர் வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த வகையில் புதுச்சேரி அருகே உள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, அருகம் புல்லினால் 7 அடி உயரத்திற்கு பசுமை விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

சுற்றுச்சூழல் சீர்கேடு
ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

ஆசிரியர் வழிகாட்டுதல்
இரசாயனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்களது ஓவிய ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதலின்படி இதை செய்துள்ளனர்.

புல் விநாயகர்
பள்ளி வளாகத்தில் இருந்த அருகம் புல் மற்றும் மூங்கில் குச்சிகளை கொண்டு இரண்டரை மணி நேரத்தில் 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

பசுமை விநாயகர்
மாணவர்களின் கற்பனையில் உருவான பசுமை விநாயகர் வலது கையில் எழுது கோலும், இடது கையில் திரிசூலம் என விநாயகரின் வடிவத்தை தத்ரூபமாக காட்டுகிறது.

இயற்கையை காப்போம்
இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், இயற்கயை பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த அருகம் புல் விநாயகர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாராட்டுவோம்
சமீப ஆண்டுகளாக இது போன்று இயற்கையுடன் இணைந்த விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விதை விநாயர் சிலைகளும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல்












Click it and Unblock the Notifications