புதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் கேரள மக்களை மிரட்டி வருகிறது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தனி வார்டு அமைக்கப்பட்டு நிபா கண்காணிப்பு பணிகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அணில் மற்றும் வவ்வால் கடித்த பழங்களை மக்கள் உண்ணக்கூடாது என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது.

கொடுமையான நிபா
நிபா வைரஸ் மரணத்தை ஏற்படுத்தும் கொடுமையான வைரஸ் என்பதால் மத்திய அரசின் 6 பேர் கொண்ட குழு உடனடியாக கேரளாவுக்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது.

காய்ச்சல் இருந்தால்
தற்போது அங்கு பருவமழை தொடங்கிவிட்டதால் நிபா வைரஸ் எளிதில் பரவிவிடும் என்பதால காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவமனையை அனுக வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் நிபா
தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாதபடி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிபா அறிகுறிகள்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அந்த நபர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து அவரை பரிசோதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications