புதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் கேரள மக்களை மிரட்டி வருகிறது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தனி வார்டு அமைக்கப்பட்டு நிபா கண்காணிப்பு பணிகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அணில் மற்றும் வவ்வால் கடித்த பழங்களை மக்கள் உண்ணக்கூடாது என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது.

கொடுமையான நிபா
நிபா வைரஸ் மரணத்தை ஏற்படுத்தும் கொடுமையான வைரஸ் என்பதால் மத்திய அரசின் 6 பேர் கொண்ட குழு உடனடியாக கேரளாவுக்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது.

காய்ச்சல் இருந்தால்
தற்போது அங்கு பருவமழை தொடங்கிவிட்டதால் நிபா வைரஸ் எளிதில் பரவிவிடும் என்பதால காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவமனையை அனுக வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் நிபா
தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாதபடி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிபா அறிகுறிகள்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அந்த நபர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து அவரை பரிசோதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications