புதுச்சேரி.. படகு தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. 3 மணிநேரமாக தீ பற்றி எரிகிறது!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பிரபல தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

Recommended Video

    புதுவையிலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை - முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரியில் உள்ள தேங்காய்திட்டு துறைமுகம் அதிக அளவில் சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் இடமாகும். சமீப நாட்களாக வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் இங்கு அதிக அளவில் வர தொடங்கி உள்ளது.

    Fire accident at a private ship manufacturing company near Puducherry Harbor

    இந்த நிலையில் தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சரியாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. அந்த நிறுவனம் உள்ளே இருக்கும் மர பெட்டிகள், ரப்பர், டயர்கள், பலகைகள் தீ பிடித்து எரிந்து வருகிறது. இன்னும் இந்த தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இந்த விபத்தில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+