கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு.. தண்ணீரால் சூழப்பட்டு தீவாக மாறிய ஏனாம் பிராந்தியம்!
புதுச்சேரி : புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏனாமின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பெய்த கனமழையால் கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 7 நாட்களாய் நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அண்டை மாநிலங்களில் மழை நின்ற நிலையில், ஏனாமில் மழை வடிந்து, சகஜ நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், மீண்டும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏனாமின் தாழ்வான பகுதிகளான பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம், கோன வெங்கட்ட ரத்னம் நகர், அய்யன்னா நகர், பரம்பேட்டா, பிரான்ஸ்டிப்பா, ராஜுவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் நீர் வரத்து அதிகரித்தால் ஆயிரத்திக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள முதியோர் இல்லத்தில் உணவு தயாரித்து படகு மூலம் விநியோகிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் எந்த நிவாரணமும் வழங்க முன் வரவில்லை என குற்றம்சாட்டியுள்ள புதுச்சேரி அரசின் சிறப்பு பிரதிநிதி, ஏனாம் முதியோர் இல்லத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு இரு வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனாமில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்ததால், மீட்பு பணிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏனாமில் இருந்து விடைபெற்றனர். இதற்கு பேரிடியாய் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலோர பகுதி, தாழ்வான பகுதி மற்றும் கோதாவரி ஆற்று பகுதிகளில் மழை நீர் ஆறாக ஓடுகிறது. வெள்ளத்தில் ஏழு நாட்களாய் தத்தளித்த மக்கள் மெல்ல சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப முயலும் நேரத்தில், தற்போது மீண்டும் பெய்து வரும் கனமழையால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications