ரவுடிகளுக்கு எதிராக வணிகர்கள் கை கோர்க்க வேண்டும்.. கிரண் பேடி திடீர் அழைப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி மாமுல் கேட்டு மளிகை கடையில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய விவகாரம் எதிரொலியாக, ரவுடிகளை கட்டுபடுத்த வணிகர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழுவை ஏற்படுத்த வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் மளிகை கடை ஒன்றில் ரவுடி ஒருவர் மாமுல் கேட்டு தகராறில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த போலீசாரையும் ரவுடி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து போலீசாரை தாக்கினார். போலீசை ரவுடி தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ரவுடிகளை கண்காணிக்கவும், கட்டுபடுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தங்களுடைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும். அதேபோல் வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் ரவுடிகளை கட்டுபடுத்த போலீசார் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி அரசுக்கும், கிரண் பேடிக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில் ரவுடி மேட்டரை வைத்து கிரண் பேடி கூறியுள்ள அறிவுரை நாராயணசாமி அரசுக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாக தெரிகிறது. காரணம், வணிகர்கள் சுதந்திரம் தரப்படாத போலீஸை நம்பி பயன் இல்லை, அரசை நம்பி பயன் இல்லை என்பது போல கூறியுள்ளார் கிரண் பேடி. எனவே ரவுடிகளுக்கு எதிராக நாராயணசாமி அரசு தீவிரம் காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications