ஆளுநராக அரசியலைமைப்பின்படி அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன்... அனைவருக்கும் நன்றி - கிரண் பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றியதாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது என்றும் கிரண் பேடி கூறினார்.
துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாம்பும், கீரியுமாக நாராயணசாமி-கிரண்பேடி
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், மாநில முதல்வர் நாராயணசாமியும் பாம்பும், கீரியுமாக செயல்பட்டு வந்தனர். புதுச்சேரி அரசு அறிவிக்கும் திட்டங்களை கிரண்பேடி தொடர்ந்து எதிர்த்து வந்தார். கடைசி வரை அரசுக்கும், ஆளுநருக்கும் ஒத்து போகவில்லை.கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கிரண்பேடி அதிரடி நீக்கம்
நாராயணசாமியும் கிரண்பேடியை திரும்ப பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி மனு அளித்தார். இதற்கிடையே நேற்று இரவு திடீர் என புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார். புதுச்சேரி ஆளுராக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசுக்கு நன்றி
இந்த நிலையில் புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றியதாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி கூறியுள்ளார். இது தொடர்பாக கிரண் பேடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- எனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது
புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன் . புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது. புதுச்சேரி மக்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி. வளமான புதுச்சேரி என்று கிரண் பேடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications