திருக்காஞ்சி கிராமத்தில் கலகலப்பு.. பாட்டி போட்ட குத்தாட்டம்.. சிரித்து ரசித்த கிரண் பேடி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் திருக்காஞ்சி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கலந்து கொண்டார். அப்போது ஒரு பாட்டி அவர் முன்பு கிராமிய பாடலைப் பாடி டான்ஸும் ஆடியதால் கிரண் பேடி அதை சிரித்து ரசித்தார்.

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த இரண்டரை வருடங்களாக வார இறுதி நாட்களில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு சென்று தூய்மைப் பயணிகளை மேற்கொள்வது, நீர்நிலைகளை தூர்வாருவது மற்றும் மழை நீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்திற்கு இன்று கிரண்பேடி ஆய்வுக்கு சென்றார். கிரண்பேடி வருவதை அறிந்த கிராமத்து பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கிரண்பேடியை ஆரத்தி எடுத்து உற்ச்சாகமாக வரவேற்றனர். சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் வங்கி கடன் பெற்று தாங்கள் உற்பத்தி செய்த கலைபொருட்களை காட்சி வைத்திருந்தனர். இதனை கிரண்பேடி பார்வையிட்டார்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரண்பேடி புதுச்சேரியின் தேவதை என்றும், அவர் புதுச்சேரி மக்களுக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார் என புகழ்ந்து தள்ளினர் கிராம மக்கள். அப்போது மேடையில் அமர்ந்திருந்த கிரண்பேடி முன்பு கிராமத்து பாட்டி ஒருவர் கிராமிய பாடலை பாடியவாறு குத்தாட்டம் போட, இதை பார்த்த கிரண்பேடி மகிழ்ச்சியில் மேடையிலிருந்து எழுந்து குத்தாட்டம் போட்ட பாட்டிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

மேலும் நிகழ்ச்சியில் கிரண்பேடி பேசுகையில், யாரையும் சாராமல் சுயல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் மகளிருக்கு வாழ்த்துகள் என்றும், சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications