புதுவையில் 30ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூட உத்தரவு
புதுவை: புதுவையில் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு நிர்வாகத்திற்கான முக்கிய முடிவுகளை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா பரவலால் புதுவையில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுபான கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலை தீவிரமாக இருக்கும்... #அன்றே சொன்ன ரஜினி ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட்
இதற்கான உத்தரவை கலால் துறை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ள புதுவையில் உள்ள மதுபான கடைகளுக்கு குடிமகன்கள் படை எடுக்கிறார்கள்.
Comments
English summary
All Liquor shops are to be closed upto April 30 in Puducherry.
Story first published: Monday, April 26, 2021, 22:56 [IST]