புதுச்சேரி சபாநாயகராகிறார் சிவக்கொழுந்து.. துணை சபாநாயகராகிறார் பாலன்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் தேர்தலில் துணை சபாநாயகர் சிவகொழுந்து போட்டியிடுகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடும் என சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியான திமுக சார்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு தற்போதைய துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவின் பெயரை முன்மொழியப்பட்டு சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. அதுவரை எதிர்கட்சிகள் சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதன் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சிவக்கொழுந்து சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். விடுமுறை நாட்களில் அறிவிப்பு வெளியிட்டதால் வெளியூர் சென்றுள்ள எம்.எல்.ஏக்கள் வர இயலாது எனக்கூறியும், சபாநாயகர் தேர்தலுக்கு கால நீட்டிப்பு தர வலியுறுத்தியும், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளிக்க ராஜ்நிவாஸ் சென்றனர்.
ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளதால் தங்களது கோரிக்கை மனுவை ஆளுநரின் செயலரிடம் அளித்துள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடமும் மனு அளித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications