புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- 10 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் வாபஸ்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்பப் பெற்றது. மேலும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியிலும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஆனால் புதுச்சேரி பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து அதிருப்தி ஏற்பட்டதால் அதிமுக- பாஜக கூடணியில் இருந்து பா.ம.க. விலகியது. இதனையடுத்து தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து 10 தொகுதிகளில் பா.ம.க. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.
இதனால் அதிமுக, பாஜக கட்சிகள் அதிர்ச்சி அடைந்து பாமகவை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடையும் தருணத்தில் 10 தொகுதிகளிலும் பா.ம.க. திடீரென வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது.
அத்துடன் இந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை எனவும் அறிவித்துள்ளது. பா.ம.க.வின் இந்த திடீர் முடிவு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications