Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏனாமில் பயங்கரம்... சுயேட்சை வேட்பாளர் கொடூரமாக தாக்கி கோதாவரி ஆற்றில் வீச்சு- போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

ஏனாம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஆந்திராவில் உள்ள ஏனாம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆற்றில் வீசபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனாம் தொகுதியை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் திடீரென விலகினார்.

Puducherry Assembly Election: Yanam Independent Candidate rescue with injures

இந்த நிலையில் ஏனாம் தொகுதியில் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆதவுடன் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார். அதேநேரத்தில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.

ரங்கசாமிக்கு எதிராக 14 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். இவர்களில் பிரசாத் பொம்மடியும் ஒருவர். கடந்த சில நாட்களாக பிரசாத் பொம்மடியை காணவில்லை என அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோதாவரி ஆற்றில் படுகாயங்களுடன் பிரசாத் பொம்மடி இன்று மீட்கப்பட்டார். சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் ஏனாம் தொகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+