வாழ்த்துகள் சார்.. உங்களுக்கு கொரோனா இல்லை.. நாராயணசாமிக்கு நல்ல சேதி சொன்ன டாக்டர்ஸ்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே நாள்தோறும் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் தினந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அறியும் வகையில், அவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்தது.
அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு சுகாதாரத்துறையினர் நேற்று கொரோனா சோதனை மேற்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் உமிழ்நீர் எடுக்கப்பட்டு, சோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது.

இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள் உள்ளிட்ட 21 பேருக்கும் மற்றும் வெளியே சந்தேகிக்கும் நபர்கள் 35 பேர் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை கொரோனா சமூகத்தொற்றாக மாறவில்லை. இருப்பினும் அண்டை மாநிலமான தமிழக பகுதிகளான விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கு இரண்டாவது முறை மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உள்ளதென வந்துள்ளதால் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் மத்தியபிரதேசத்தில் இருந்து கொரோனா பாதிப்பு சந்தேகிக்கப்பட்ட 1,500 நபர்களின் உமிழ்நீர் மாதிரிகள் தனி விமானம் மூலம் புதுச்சேரி விமானம் நிலையம் வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் உமிழ்நீர் மாதிரிகள் ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications