புதுவையில் அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளை மூட ஆளுநர் தமிழிசையிடம் பரிந்துரை!
புதுவை: புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு பரிந்துரை செய்தார்.
தமிழகத்தைபோல் புதுவையிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு பரிந்துரை செய்தார். மேலும் கொரோனா பரிசோதனை, கண்டறிதல் மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்பவர்கள், வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications