பணத்திற்காக பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை.. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மகன் கைது

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரியில் பணத்திற்காக பெற்ற தாயையே கழுத்தை இறுக்கி கொலை செய்து நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர். இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    பணத்திற்காக பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை.. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மகன் கைது

    புதுச்சேரியில் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் நேருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ராணி (50). இவர்களுக்கு சரளா (30) என்ற மகளும், அய்யனார் (27) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ராணி தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து அனுப்பிய பணத்தில் அவரது மகன் அய்யனார் புதியதாக வீடு கட்டியும், நெல் அறுவடை இயந்திரம் தொழிலும் நடத்தி வந்துள்ளார்.

    அய்யனார்

    அய்யனார்

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதுச்சேரி திரும்பிய ராணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தான் சம்பாதித்து மகனிடம் கொடுத்த பணத்தை மகள் சரளாவுக்கும் ராணி திருப்பி கேட்டதாக தெரிகிறது. இதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மர்மச் சாவு

    மர்மச் சாவு

    இதனால் தாய், மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் ராணி வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    கொரோனா பரிசோதனை முடிவு வந்தவுடன் ராணியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கழுத்தை இறுக்கியும், தலையில் அடித்தும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    ராணியின் மகள் புகார்

    ராணியின் மகள் புகார்

    அப்போது, தனது தாய் ராணியை தம்பி அய்யனார் கொலை செய்து இருக்கலாம் என போலீசில் சரளா தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அய்யனாரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அய்யனாரிடம் தாய் ராணி வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்தை கேட்டுள்ளார்.

    தாய் இறப்பு

    தாய் இறப்பு

    இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகறாரில் மகன் அய்யனார் தனது தாயை தள்ளி விட்டதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கினார். பின்னர் வீட்டில் இருந்த மின்சார வயரால் தாயின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும் தாய் இறந்ததை தெரியாதது போல் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்துள்ளார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் தாய் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமானதை தொடர்ந்து போலீசார் அய்யனாரை கைது செய்தனர். பணத்திற்காக பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+