துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போலீஸ் ஸ்டேசனில் புகார்.. புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மாநில முதல்வர் நாராணயசாமிக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் மோதல் போக்கு உள்ளது. புதுச்சேரியில் முதல்வராக நாரயணசாமி பதவியேற்றது முதல் இந்த மோதல் இருந்து வருகிறது.

ஆளுநர் கிரண்பேடி தனியாகவும், முதல்வர் நாராயணசாமி தனியாகவும் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து பேசிவருகின்றனர். இதனால் யாருடைய உத்தரவை செயல்படுத்துவது என்ற குழப்பத்தில் அவ்வப்போது புதுச்சேரி அதிகாரிகள் தவிப்பது உண்டு.
இதனிடையே மத்திய அரசு புதுச்சேரியில் அரசின் நடவடிகையில் தலையிட்டு, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இருப்பதாக 2017ம் ஆண்டு அறிவிப்பு ஆணையும் வெளியிட்டது.இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வரின் அதிகாரத்திலும், அரசின் அன்றாட அலுவல்களிலும் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுககு நேரடியாக உத்தரவிடவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் நடவடிக்கையில் தலையிடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்து வெளியிட்ட அறிவிப்பாணையையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் குறைதீர்ப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகிறார். இதன் மூலம் மக்களின் குறைகளை கேட்க ஆளுநரோ அதிகாரிகளோ, தனியார் ஊடகங்களையோ வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை கிரண்பேடி மீறிவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications