யாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை!
புதுவை: புதுச்சேரியில் கோயில் வாசலில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த பாட்டியின் பையில் வங்கிக் கணக்கு புத்தகம், நகை, பணம் இருந்ததை கண்டு அவரை அப்புறப்படுத்த வந்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுவை காந்தி வீதியில் உள்ளது ஈஸ்வரன் கோயில். இங்கு ஏராளமான பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு வருகின்றனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை யாசகம் கேட்டு தொல்லை செய்வதாகவும் கொடுக்காவிட்டாலும் அவர்களில் சிலர் சாபமிடுவதும் திட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தினர். 85 வயதான மூதாட்டி ஒருவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

காவல்துறை
அப்போது மூதாட்டியின் பையில் ரூ 15 ஆயிரம் பணம், தங்க நகைகள் ஆகியன சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

1 லட்சம் பணம்
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் மூதாட்டியின் பையை சோதனை செய்தனர். அதில் வங்கி பாஸ்புக் இருந்தது. அதை சோதனை செய்த போது பாட்டியின் பெயரில் ரூ 1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

பாட்டி பெயர் பர்வதம்
மேலும் அந்த பையில் தங்க கம்மல், ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன் கார்டு ஆகியன இருந்தன. அந்த பாட்டியின் பெயர் பர்வதம் என்பதும் அவரது கணவர் பெயர் ரமணன் என்பதும் பாட்டி உருளையன்பேட்டை பகுதி வாழைக்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

கோரிக்கை
இதையடுத்து பணம், நகையை பாதுகாப்பு கருதி எடுத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications