முதன்முறையாக பள்ளி வாசல்களில் தேசிய கொடி.. அனைவரும் இந்தியர்கள்.. உறுதிமொழியேற்ற இஸ்லாமியர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் முதன்முறையாக பள்ளிவாசல்களில் தேசியக்கொடியை ஏற்றி இஸ்லாமிய பெருமக்கள் குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

நாடு முழுவதும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் முதன்முறையாக அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள், தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின விழாவை கொண்டாடியுள்ளனர். முல்லா வீதியில் உள்ள மீரா பள்ளிவாசலில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில், தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, நாம் அனைவரும் இந்தியர். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்கள் என இஸ்லாமியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு, எதிராக நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்த பிறகு பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications