புதுவை, காரைக்காலில் கனமழை! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுவை, காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குவதால் அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

Schools declared holiday for Karaikkal

அந்த வகையில் இன்று முதல் நாளை மறுநாள் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர்கள். புதுவையில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+