லோக் சபா தேர்தல்.. கூடவே தட்டாஞ்சாவடி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் .. புதுவையில் விறுவிறு
புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்காக புதுச்சேரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த பிறகு, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள மாநில தலைமை தேர்தல் துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, ஏப்ரல் 18 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அத்துடன் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் 2019 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்களர் பட்டியலின்படி 9 லட்சத்து 53 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளதாகவும், புதுச்சேரியில் தேர்தல் பணிகளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்களும், 3 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

அவர், புதுச்சேரியில் தேர்தல் விதி மீறல்களை கண்கானிக்க 41 பறக்கும் படைகளும், 33 நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து பேசிய அவர், வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்யும் மாநிலத்தில் புதுச்சேரி மாநிலமும் ஒன்று என்றும், புதுச்சேரியில் வாக்காளர்கள் வாக்களிக்க 970 வாக்குச்சாவடி மையங்களும், 5 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கந்தவேலு தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்.ஆர்.காங் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications