வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்கிறது.. நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி!
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்யநாராயணன் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளதாகவும் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், அறிவியல் ரீதியாக தடயங்கள் சேகரிப்போடு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டால் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்திற்கு கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேங்கைவயல் சென்று நீதிபதி சத்யநாராயணன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் 2வது முறையாக இன்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும், சிபிசிஐடி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் நீதியரசர் சத்யநாராயணன்.
அதைத்தொடர்ந்து பேசிய நீதியரசர் சத்யநாராயணன், "வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை. இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications