பதிவுத்துறை சேவைகளை இணையம் வழியாக பெறும் ஸ்டார் 3.0 திட்டம்.. விராலிமலையில் விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை: பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு உள்பட 18 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவுத்துறை சேவைகளை இணையம் வழியாக எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த முகாமிற்கு திருச்சி மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட பதிவு தலைவர் சுசீலா (தணிக்கை), புதுக்கோட்டை சார் - பதிவாளர் அறிவழகன் (நிர்வாகம்) சார்பதிவாளர் திருமதி அபிராமி ஆகியோர் கலந்து கொண்டார். தமிழகத்தில் பதிவுத்துறை சேவைகளை எளிமைப்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

பதிவுத்துறை ஸ்டார் 3.0 திட்டம்
பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் போன்ற 18 வகையான சேவைகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
"TNREGINET" என்ற கைபேசி செயலி வழியாக வில்லங்கச் சான்று, ஆவணப் பதிவுக்கான முன்பதிவு வில்லை (Token) நிலை, வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப்பதிவு விபரம், சொத்தின் மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத் துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலை தொடர்பாக புலனம் (WhatsApp) வழியாகவும் செய்தி அனுப்பும் வசதியும் இந்த ஸ்டார் 3.0 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த ஸ்டார் 3.0 மென்பொருள் அறிமுகம் செய்யபப்ட்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு முகாமில் பத்திர பதிவுத் துறை சேவைகள் இடைத்தரகர்கள் இன்றி மக்களே எப்படி நேரடியாக பெற முடியும் என்பது பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. அந்தவகையில், பதிவுத் துறை சேவைகளை இணையம் வழியாக எவ்வாறு பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,பொதுமக்கள், வங்கி அலுவலர்கள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் இந்த நிகழ்ச்சியின் போது பத்திர பதிவுத்துறை சேவைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தரப்பட்டது. tnreginet.gov.in, http://tnreginet.gov.in/என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் பொதுமக்கள் நேரடியாகப் பெறுவது குறித்து விளக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு கையேடு
விராலிமலையில் பதிவுத்துறை அலுவலகத்தில் இணையம் வழி சேவை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திருச்சி மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட பதிவு தலைவர் சுசீலா (தணிக்கை), புதுக்கோட்டை சார்-பதிவாளர் அறிவழகன் (நிர்வாகம்) சார்பதிவாளர் திருமதி அபிராமி ஆகியோர் கலந்து கொண்டார். ஸ்டார் 3.0 விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு கையேட்டினையும் திருச்சி மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் திருமதி சத்யப் பிரியா வழங்கினார்.












Click it and Unblock the Notifications