எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு!
புதுக்கோட்டை: ஆடு திருடர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, 2 பைக்குகளில் ஒரு கும்பல் வருவதை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் பார்த்துள்ளார்... அந்த நபர்களிடம் ஆடுகள் இருந்ததால் சந்தேகமடைந்த பூமிநாதன், பைக்குகளை வழிமறித்திருக்கிறார்.. ஆனால் அந்த கும்பலோ, போலீஸை மதிக்காமல் வேகமாக கடந்து சென்றுள்ளது. உடனடியாக அவர்களை பூமிநாதன் பைக்கில் பின் தொடர்ந்திருக்கிறார்..
ஆடு திருட்டு: ஆடு திருட்டு கும்பலை 8 கிலோ மீட்டர் தூரம் சரியாக பின்தொடர்ந்த பூமிநாதன், புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளபட்டி எனும் ஊரில், ஒரு பைக்கில் சென்ற திருடர்களை பிடித்துள்ளார். இதையடுத்து, அந்த கும்பல் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செயத்னர்.
அப்போது ஒரு இடத்தில் திருடர்கள் மின்னல் வேகத்தில் சென்றதும் அவர்களை பிடிக்க பூமிநாதன் துரத்துவதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் மறுநாளே கைது செய்தனர்.
பூமிநாதன்: இதற்கு பிறகு, பூமிநாதன் ரோந்து செய்த இடத்தில் பதிவாகியிருந்த செல்போன் சிக்னல் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் இருந்தது ஆய்வு செய்யப்பட்டது.. பிறகு, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இதையடுத்து, தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தில் கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
இதில், மணிகண்டன் மற்றும் 2 சிறார்கள் கைதானார்கள்.. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மணிகண்டன் சிறையிலும், மற்ற 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.. மணிகண்டன் மீது ஏற்கனவே வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.. இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மிகுந்த பரபரப்பு: ஆனால், 29ம் தேதி அதாவது இன்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.. எனவே, இன்றைய தினம் இந்த கொலை வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்போவதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆடு திருடர்களால் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் இருவர் மீதான வழக்கு இளைஞர் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications