விவசாயத்துக்கு தனி பட்ஜெட் கோரும் பஞ்சாப் முதல்வர்
Subscribe to Oneindia Tamil
மொகாலி: ரயில்வே பட்ஜெட் போல விவசாய பட்ஜெட் என தனியே தாக்கல் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் விவசாய மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் மக்கள் தொகையில் 55% பேர் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். அதனால் ரயில்வே பட்ஜெட்டைப் போல விவசாயத்துக்கும் தனியே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகாலத்தில் 1 லட்சம் விவசாயிகள் வேளாண் தொழிலையே கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
எந்த ஒரு தாமதமும் இல்லாமல் வேளாண் தொழிலாளர்களுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications