மதம் மாற சொல்றாங்க! ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி! மண்ணெண்ணெய் கேனுடன் மடக்கிய போலீஸ்..!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்றம் செய்யக் கோரி தன்னை சிலர் கட்டாயப்படுத்துவதாக கூறுவதால் மன உளைச்சல் அடைந்த பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிருத்துவ மதத்திற்கு மாறும் மாறு அக்கிராமத்தில் உள்ள சிலர் கட்டாயப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கட்டாய மதமாற்றம்
இதே காரணத்தை கூறி சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு வளர்மதியின் மகனை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சல் அடைந்த வளர்மதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

பகீர் புகார்
கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி தஞ்சையில் படித்த வந்த பிளஸ்2 மாணவி லாவண்யா, தனது பள்ளியில் உள்ளவர்கள் தன்னை மதமாற்றம் செய்யக் கோரி வற்புறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் 15ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த மதமாற்றம் இல்லை என போலீசார் கூறிய பிறகே விவகாரம் அடங்கியது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்நிலையில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகக் அடிக்கடி கூறப்படும் நிலையில், தமிழக அரசு இதனை தடுக்க நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications