ஓபிஎஸ் காரை தடுத்து நிறுத்தி சல்லடை போட்டு சோதனை செய்த பறக்கும் படை.. பர்ஸை திறந்து காட்டிய ஓபிஎஸ்!
ராமநாதபுரம்: ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஓபிஎஸ் தனது பர்ஸை திறந்து அதிகாரிகளிடம் காட்டினார்.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சுயேட்சையாக களமிறங்கி உள்ள ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார் ஓபிஎஸ்.

அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அவர் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அதிமுக தரப்பும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக, இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இதனால், அதிமுக வாக்குகளை ஓபிஎஸ் பெறுவதில் பெரிய சிக்கல் உள்ளது. இதுபோக, பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் பல அப்பாவிகளை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்தி எடப்பாடி பழனிசாமி சதி செய்துள்ளதாகவும், எத்தனை பேர் ஓபிஎஸ் பெயரில் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்றும் வெற்றி எங்களுக்குத்தான் என்றும் கூறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
இப்படியாக தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறுவதற்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஓ.பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டு அவரை திணறச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனம் மற்றும் பரப்புரை வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அவரது காரில் வைத்திருந்த பர்ஸை திறந்து காட்டுமாறு கூறிய அதிகாரிகள், அதில் அதிகளவில் பணம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் காருக்குள்ளும் சோதனை நடத்தப்பட்டது. அதில் பணம், பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் பின்னர் ஓபிஎஸ் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஓபிஎஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications