“செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்”.. அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த ரிப்ளை!
ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் டைம்பாஸுக்காக கொலைகள் நடக்கிறது எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு "செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்" என அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டைம்பாஸுக்காக கொலைகள் நடைபெறுகிறது, திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. அதன் மேனேஜராக இப்போது ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பின்னால் உதயநிதியும் இன்பநிதியும் மேனேஜர்களாக வருவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாட்டில் டைம்பாஸுக்காக கொலைகள் நடைபெறுகிறது என செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். செல்லூர் ராஜு ஒரு காமெடி பீஸ்" எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "போக்குவரத்து துறை என்பது பொதுமக்களுக்கு சேவையாற்றும் துறை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டுமே பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளதால் தமிழக முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறுகின்றனர். அதிகாரிகள் எந்த மாநிலமாக இருந்தாலும் வேலை செய்தால் போதும். இந்தியா என்பது ஒரு நாடு. நாம் இந்தியர்கள் அடுத்து தமிழர்கள் எல்லாரும் நமது சகோதரர்கள்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விடுதி காப்பாளர், சமையலர் பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 1353 விடுதிகளில் 1264 விடுதிகள் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒன்பது புதிய சொந்த விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications