அத்துமீறும் இலங்கை படை.. மீனவர்கள் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன்! நாம் தமிழர் சீமான் பேச்சு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து ஆவேசமாகப் பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. "எங்கள் மண் எங்கள் உரிமை" என்ற தலைப்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும் குறிப்பிட்ட அவர் இது குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
சீமான்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "திமுகவை ஒருவராலும் வீழ்த்த முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். பல சுவரொட்டிகளில் நிரந்தர முதல்வர் என எழுதி வைத்தவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இங்கு வீழ்த்த முடியாதது என்று எதுவுமே கிடையாது.
உலகின் வெல்ல முடியாத படை என்று ஒன்று இருந்ததே இல்லை என்றே ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறுகிறார். இப்போது ஆழ்பவர்களிடம் கொள்கை கோட்பாடு என எதுவுமே இல்லை.
தமிழர்கள்: இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வகுத்துக் கொடுத்த அம்பேத்கர் இந்தியாவை இந்து நாடு எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்றே கூறியிருக்கிறார். இந்த நாடு இந்த நிலப்பரப்பு முழுக்க பரவிக் கிடந்தவர்கள் தமிழர்கள். எனது மூதாதையர்களின் மொழி கூட தமிழ் தான் என்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார்.இந்த நாடு என் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரே ஒரு இனத்திற்குத்தான் உரிமை உண்டு, அது தமிழினத்திற்குத் தான் என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியுள்ளார்.
மேற்கு வங்கத்தை 21 ஆண்டுகள் ஆண்ட ஜோதி பாசுவும் அம்பேத்கர் சொல்வதை ஏற்பதாகவே கூறியிருக்கிறார் இந்திய நிலப்பரப்பு முழுக்க பரவி வாழ்ந்தவர் தமிழர். தெற்காசிய முழுக்க தமிழர்கள் பரவி வாழ்ந்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்களே கூறியுள்ளனர். அப்படியிருந்த தமிழர்கள் குறுகிப் போய் அரசியல் வலிமை இழந்து, உரிமை இழந்து வாழ வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சமூகம் மீண்டும் எழுச்சி பெற இதுவே சரியான காலகட்டமாக இருக்கும். தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சிக்குக் காரணமாக இருக்கும். அதற்குத் தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும். இது நிச்சயம் மிக விரைவில் நடக்கப் போகிறது" என்று அவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்குக் குண்டு: தொடர்ந்து தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது குறித்துப் பேசிய அவர், "நான் முதல்வரானால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக மீனவர்கள் கையில் வெடிகுண்டு ஆயுதம் கொடுத்து அனுப்புவேன்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்ட சீமான் இதன் காரணமாகவே நாம் தமிழர் கட்சி அங்கேயே நடத்தி இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications