2 சமூகங்கள் இடையே வெறுப்பை தூண்டும் பதிவு.. பரமகுடி மதனை தூக்கிய போலீஸ்! நெட்டிசன்களுக்கு வார்னிங்
ராமநாதபுரம்: இரு சமுதாயத்தினருக்கு மத்தியில் பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வாசகங்களை பதிவேற்றம் செய்த பரமகுடியை சேர்ந்த மதன் விக்னேஷ் என்ற நபரை போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் பரமக்குடியை அடுத்து உள்ள கமுதக்குடியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மதன் விக்னேஷ் (வயது 25) என்பவர் இது தொடர்பாக மேலும் பிரச்சனையை தூண்டும் வகையில் வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் மதன் விக்னேஷ் மீது பிணையில் விடமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினர் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக வாசகங்களை பதிவு செய்த மதன்விக்னேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து ராமநாதபுரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளதாவது, "இது போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகவலைதளங்கள் மூலம் வன்முறையை தூண்டும் விதமாகவோ, இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகவோ தகவல்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து மதம், சாதி, மொழி சார்ந்து அவதூறான வெறுப்பை பரப்பும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. வட மாநிலங்கள் தொடங்கி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு வரை நாடு முழுவதும் சமூக வலைதள வெறுப்பு பிரச்சாரங்களின் காரணமாக வன்முறை சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டு உள்ளன.
இதனை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுத்து வந்தாலும், அது ஓய்ந்தபாடில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே சாதி, மத வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதே சமயம், கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு இதுபோல் சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை பின்பற்றியே இளைஞர்களும், சாதாரண மக்களும் இதுபோன்ற சர்ச்சை பதிவுகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications