ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 112 கிலோ அதிசயம்.. மீனவர்கள் செம்ம குஷி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. வழக்கமாக எப்போதும்போல் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன் சிக்கியுள்ளது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் இந்த மீன் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் மீனவர்கள்.
எழில் கொஞ்சும் ராமேஸ்வரம் கடலில் நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், டால்பின், திமிங்கலம், கடற்பாசிகள் என ஏராளமான அரிய வைகயான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை மீன்கள் ராமநாதபுரம் கடலில் தென்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதிக்கு நாட்டுப் படகில் வழக்கம்போல மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். மீனவர்கள் மீன்களை எல்லாம் பிடித்துவிட்டு கரைக்கு நேற்று திரும்பியுள்ளனர்.
அப்போது, மீனவர்களின் வலையில் ஏராளமான பல வகையான மீன்கள் சிக்கியுள்ளன. அவற்றுடன் அரிய வகையான மஞ்சள் வால் சூரை மீனும் சிக்கியுள்ளது. சுமார் 112 கிலோ எடை கொண்ட அந்த சூரை மீன் 3 மீட்டர் நீளத்தில் இருந்துள்ளது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருந்த சூரை மீனை 4 மீனவர்கள் சேர்ந்து கரைக்கு தூக்கி வந்துள்ளனர்.
ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் இந்த மீன் மீனவர்கள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மஞ்சள் வால் சூரை மீனை கேரளாவில் உள்ள வியாபாரி ஒருவர் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். அரியவகை ராட்சத மஞ்சள்வால் சூரை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மஞ்சள் வால் சூரை மீன்கள் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மிக ஆழமான பகுதியில் மட்டுமே காணப்படும். இந்த மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது மிகவும் அரிதாகும் என்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications