நடுக்கடலில் அக்கிரமம்.. தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை! தொடரும் அட்டூழியம்
ராமநாதபுரம்: ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர் அவரை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற அட்டூழியங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை தடுக்க வேண்டும் என பல முறை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இலங்கை கடற்படை அராஜகப்போக்கை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு சென்றதில் இருந்தே வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இலங்கை கடற்படை தாக்குதல், கைது சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்து இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் 300 க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப் படகுகளை மறித்து விரட்டி அடித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக மீன்கள் ஏதும் பிடிக்காமல் பதறியடித்துக்கொண்டு மீனவர்கள் கரைக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்படி பல முறை பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் அல்லாமல் புதிய பிரச்சனையாக கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீது 3 முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications