மோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்
காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு 75 லட்சத்தை இளைஞர் இழந்துள்ளார்
ராமநாதபுரம்: நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு, தொழிலதிபரின் மகன் ஒருவர் சுமார் 75 லட்சம் ரூபாயை ஒரு மோசடி கும்பலிடம் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனுக்கு வயசு 27. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இன்டர்நெட்டில் இருந்த ஒரு அட்ரஸ்-க்குள் போனார்.
நடுநடுவே ஆபாசமான போட்டோக்கள் வந்தன. அதை டெலிட் செய்யலாம் என்று போனால் இன்னொரு வெப்சைட் திறந்தது. அதில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் கொட்டி கிடந்தன. "யாருக்கு ஆசையோ, இந்த நடிகைகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று ஒரு குறிப்பு இருந்தது.

நுழைவு கட்டணம்
உடனே தொழில் அதிபர் மகனுக்கு சபலம் வந்து, தன்னுடைய செல்போன் நம்பர் முதல் எல்லா விவரத்தையும் அதில் போட்டுவிட்டார். அடுத்த செகண்ட்டே, "யாரை சந்திக்க உங்களுக்கு ஆசை" என்ற கேள்விவந்தது. அதற்கு இளைஞர் காஜல் அகர்வாலை சந்திக்க வேண்டும் என்று சொல்லவும், ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணத்தை செலுத்துங்கள்" என்று பதில் வந்தது.

50 ஆயிரம் ரூபாய்
இவர்தான் தொழில் அதிபர் மகனாயிற்றே.. அடுத்த வினாடியே பேங்கில் இருந்து பணத்தினை கட்டிவிட்டார். அது உறுதி செய்வதற்கான ஒரு மெசேஜும் வந்தது. பணத்தை கட்டிவிட்டதும், வானத்திலேயே பறந்தார் இளைஞர். இதனிடையே, இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு, 50 ஆயிரத்தை பிடுங்கியவர்களோ, அந்த இளைஞர் யார், வசதியானவர் என்றால் திரும்பவும் பணத்தை கறக்கலாம் என்று நோட்டம் போட்டுள்ளனர்.

ஆபாச படங்கள்
இது நடந்து முடிந்த சில நாட்களில், இன்னும் கொஞ்சம் பணத்தை செலுத்தினால் காஜர் அகர்வாலிடம் அழைத்து செல்கிறோம் என்று தகவல் வரவும்தான் இளைஞர் உஷார் ஆனார். அதனால் அப்படியே பின்வாங்க ஆரம்பித்தார். ஆனால் எதிர்தரப்பினர் படு உஷார் பார்ட்டிகள்... இளைஞர் ஜகா வாங்கவும், அடுத்த சிலநிமிடங்களில், அவரையும், வேறு சில பெண்கள், நடிகைகளை இணைத்து ஆபாச படங்களை செல்போனுக்கு அனுப்ப தொடங்கினர்.

தவணை
இதை பார்த்ததும் இளைஞர் பதறி போய்விட்டார். மார்பிங் செய்த படங்களை டெலிட் செய்யுங்கள் என்று கேட்டதற்கு, கேட்கும் பணத்தை தந்துவிட்டால் அழிக்கிறோம் என்று மிரட்டினர். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்த இளைஞர், அவர்கள் கேட்ட ரூ.60 லட்சத்தை 3 தவணையாக பேங்கிற்கு அனுப்பி உள்ளார். இதையும் வாங்கி கொண்டு திரும்ப திரும்ப பணத்தை கேட்டனர் அந்த கும்பல்.

புகார்
இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான இளைஞர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டே போய்விட்டார். வீட்டில் செல்ல மகனை காணாமல் போலீசில் புகார் தரவும், கடைசியில் கொல்கத்தாவில் இருந்து இளைஞரை மீட்டனர் போலீஸ். அப்போதுதான் காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60 லட்சத்தை இழந்தது தெரியவந்தது.

கிரிக்கெட் சூதாட்டம்
பணம் செலுத்திய வங்கி கணக்கினை வைத்து தேவகோட்டை பாவனாகோட்டை மணிகண்டன் என்பவருடையது என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார்தான் இப்படி செய்ய சொன்னார் என்று தெரிவித்தார். இதையடுத்து சரவணக்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், நடிகை மோகம் காட்டி இதுவரைக்கும் இளைஞரிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது.

2 பேருக்கு வலை
இதனால் எஞ்சிய தொகையை கைப்பற்றிய போலீசார் சரவணகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications