கஞ்சா சோதனை நடத்தப் போன போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. சேலம் ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத பணம்!
சேலம்: சேலம் அம்மாபேட்டையில் ரௌடி ஒருவர் வீட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ. 1 கோடி அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கஞ்சா பதுக்கலை தடுக்க தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சேலம் மாநகர பகுதியிலும் கடந்த சில நாட்களாகவே கஞ்சா பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சபீர் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சபீர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, சபீர் வீட்டில் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தியபோது, ஒரு பெரிய பை முழுக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதனை தெடர்ந்து பணத்தை எண்ணிப் பார்த்ததில் சுமார் ரூபாய் 1 கோடி இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்தப் பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பின்போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ரூ.500, ரூ.1,000 செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்து, அதை பதுக்கி வைத்திருந்த சபீரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலாஜி, கோகுலநாதன் என்பவர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், 2016ல் மதிப்பிழப்பின்போது ரூ.1 கோடியை வங்கி மூலம் மாற்றுவதற்காக பாலாஜி, சபீரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தை மாற்ற முடியாமல் சபீர் தனது வீட்டிலேயே பையில் வைத்திருந்துள்ளார். இதையடுத்து பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்ட நிலையில், கோகுலநாதன் அந்த பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், அதனை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்லுமாறு சபீர் கூறியுள்ளார். இதையடுத்து, கோகுலநாதன் போலீசாரிடம், சபீர் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.
அப்படி, சபீர் வீட்டில் கஞ்சா தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையின்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்த சபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சபீரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகளை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இந்த பணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 1 கோடி அளவுக்கு சிக்கி இருப்பது சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications