பெத்தா இப்படி பிள்ளையைப் பெக்கணும்டா.. போலீஸ் ஜீப்பில் டிக்டாக்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!
சேலம்: "பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்டா" என்ற டயலாக் சத்தம் கேட்க, சிங்கம் பட சூர்யா போல போலீஸ் ஜீப்பிலிருந்து நடந்து வருவதுபோல வீடியோ வெளியிட்ட 2 பேரை போலீசார் கொத்தாக பிடித்துகொண்டு போய்போட்டனர்!!
இப்பவெல்லாம் இளசுகளுக்கு டிக்-டாக் மோகம் அதிகரித்துவிட்டது. டான்ஸ், ஆட்டம், பாட்டம், நடிப்பு என கலக்கலாக உள்ளது இந்த டிக்-டாக் ஆப். அதனால் இதன் பயன்பாட்டாளர்களும் அதிகம். ஆனால் சிலர் இதில் ஆர்வ கோளாறினால் வரம்புமீறி நடந்து கொண்டு கம்பி எண்ணும் நிலைக்கும் ஆளாகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் போலீஸ் ஸ்டேஷனில் வேற ஒரு வேலையாக சென்ற இளைஞர்கள் 4 பேர், திடீரென் ஸ்டேஷன் வாசப்படியில் "சிறுத்தை" பட வசனத்தை பேசி நடித்து அதில் டிக்டாக்கில் வெளியிட அத்தனை பேரும் சிறைக்கு போனார்கள்.

போலீஸ் ஜீப்
இப்போது அதுபோலவே இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. ஆத்தூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டருக்கு பொலிரோ ஜீப் ஒன்று தரப்பட்டுள்ளது. இந்த ஜீப்பின் ரேடியேட்டரில் பிரச்சனை என்பதால், நரசிங்கபுரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் ஷெட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

சிங்கம் சூர்யா
இந்த ஜீப்பை பார்த்ததும், அங்கிருந்த மெக்கானிக்குகள் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சபரிநாதனுக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் தங்களையும் ஒரு போலீஸ்காரராகவே அதாவது சிங்கம் சூர்யாயாவை போல தங்களையும் 2 பேரும் நினைத்துகொண்டார்கள்.

விஜயகாந்த் வசனம்
அந்த ஜீப்பை வைத்து அதற்கு முன் நடித்தும், பாட்டு பாடியும் வீடியோ எடுத்தார்கள். ‘பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்டா' என்ற வசனம் பின்னணியில் ஒலிக்க, இருவரும் ஜீப்பிலிருந்து இறங்கி வருகிறார்கள். அதனால், பின்னணியில் விஜயகாந்த் நடித்த தவசி பட பாடலை ஒலிக்கிறது. இப்படியெல்லாம் வீடியோ எடுத்து அதை டிக்டாக் ஆப்பில் பதிவிட்டும் விட்டார்கள். சில நாட்கள் கழித்துதான் இந்த வீடியோ வைரலானதும் ஆத்தூர் போலீசார் அதிர்ந்து போனார்கள்.

ஜாமீனில் விடுதலை
பிறகு அந்த ஜீப் ஓட்டுநர் சிவலிங்கம் அளித்த புகாரின்பேரில் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு, ரிப்பேர் செய்வதை விட்டுவிட்டு இந்த தேவையில்லாத வேலையை பார்த்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் அரசுக்கு எதிரான குற்றத்தை தூண்டுதல், தொழில் நுட்ப குற்றத்தடுப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு இருவரும் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications