சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது
சேலம்: சேலத்தில் லாட்ஜில் அறை எடுத்து விபசாரம் செய்து வந்த இரண்டு அழகிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக வெளிமாநில அழகிகள் அறை எடுத்து தங்கி விபசாரம் செய்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கருக்கு புகார்கள் வந்தன.
இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் இன்று அதிகாலை
சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள அந்த தனியார் தங்கும் விடுதியில் திடீர் என சோதனை செய்தனர்.

திருப்பூர்
அப்போது அங்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த லட்சுமி, தும்கூர் பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் இருந்தனர். இவர்களையும் இவர்கள் இருவரையும் வைத்து விபசாரம் நடத்தி வந்த திருப்பூரைச் சேர்ந்த அபுல்ஹசன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆணையர்
பின்னர் மூவரையும் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர். இவர்களைப் போல் வேறு தங்கும் விடுதிகளில் விபசாரம் நடக்கிறதா ? என கண்காணித்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தலைதூக்கும் விபசாரம்
சேலம் மாநகராட்சி பகுதியில் சில வருடங்களாக விபசாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சில தனியார் தங்கும் விடுதிகளில் விபசாரம் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது.

கண்காணிப்பு
இவர்களை கண்காணித்து விபசாரம் இல்லாமல் செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விட்டுள்ளனர். மேலும் இவர்களை இயக்க யாரேனும் இருக்கிறார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications