'சொத்து வரி, குடிநீர் வரி கட்டவில்லையாம்'.. அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த அதிகாரிகள்
சேலம்: சேலத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத அதிமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யபட்டது. இதற்கு பின்னால் திமுகவினரின் சதி உள்ளதாக அதிமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வேட்புமனு பரிசீலனை
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு
சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் நடேசனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத காரணத்தினால் நடேசனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக
''நடேசன் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தவில்லை'' அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறிய திமுகவினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வரிபாக்கிக்கான கணிணி சான்றை கொடுத்தனர்.

திமுக மீது குற்றச்சாட்டு
இதனால் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடேசன் கூறுகையில், 'அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் திமுகவினர் குறுக்குவழியில் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிகாரிகளை பயன்படுத்தி தனது வேட்புமனுவை நிராகரிக்க வைத்துள்ளனர்' என்று கூறினார்.

சொத்து வரி, குடிநீர் வரி எவ்வளவு நிலுவை?
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டுள்ளதாகவும் பிற்பகல் ஒரு மணி வரை அவகாசம் கொடுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடேசனின் மனைவி பெயரில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் சொத்து வரி மற்றும் 21 ஆயிரத்து 444 ரூபாய் குடிநீர் வரி நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications