Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சொத்து வரி, குடிநீர் வரி கட்டவில்லையாம்'.. அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத அதிமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யபட்டது. இதற்கு பின்னால் திமுகவினரின் சதி உள்ளதாக அதிமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வேட்புமனு பரிசீலனை

வேட்புமனு பரிசீலனை

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு

அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் நடேசனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத காரணத்தினால் நடேசனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக
''நடேசன் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தவில்லை'' அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறிய திமுகவினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வரிபாக்கிக்கான கணிணி சான்றை கொடுத்தனர்.

திமுக மீது குற்றச்சாட்டு

திமுக மீது குற்றச்சாட்டு

இதனால் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடேசன் கூறுகையில், 'அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் திமுகவினர் குறுக்குவழியில் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிகாரிகளை பயன்படுத்தி தனது வேட்புமனுவை நிராகரிக்க வைத்துள்ளனர்' என்று கூறினார்.

 சொத்து வரி, குடிநீர் வரி எவ்வளவு நிலுவை?

சொத்து வரி, குடிநீர் வரி எவ்வளவு நிலுவை?

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டுள்ளதாகவும் பிற்பகல் ஒரு மணி வரை அவகாசம் கொடுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடேசனின் மனைவி பெயரில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் சொத்து வரி மற்றும் 21 ஆயிரத்து 444 ரூபாய் குடிநீர் வரி நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+