சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரி கனவிலும் நினைக்காத சம்பவம்.. துணை நடிகர் ரூபத்தில் ட்விஸ்ட்
சேலம்: சேலம் அம்மாபேட்டை வித்யாநகரை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மகன் பாலாஜி சின்னத்திரையில் துணை நடிகராக பணியாற்றி வந்தார். கோபிநாத்தின் முதல் மனைவி லலிதா மற்றும் மகள் வசந்தி ஆகியோர் 1978ம் ஆண்டே இறந்துவிட்டனர். தனது பெரியம்மா மற்றும் அக்காளுக்கு இறப்பு சான்றிதழ்கள் வாங்க துணை நடிகர் பாலாஜி விஏஓவை அணுகி உள்ளார். அவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் இருந்தால் தான் சொத்துக்களை ஒருவர் இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியும். இதனால் அந்த காலத்தில் இறந்தவர்களுக்கும் இப்போது சான்றிதழ் வாங்க அணுகிறார்கள். அப்படி சான்றிதழ் வழங்க சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வருகிறது. அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து அரசு அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள். மக்கள் துணிந்து ஒவ்வொரு லஞ்சத்திற்கு எதிராகவும் புகார் அளிக்க தொடங்குவதால் தற்போது கைது நடவடிக்கை அதிகமாகி வருகிறது. அந்த வகையில் சேலத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அம்மாபேட்டை வித்யாநகரை சேர்ந்தவர் கோபிநாத் என்பவருடைய மகன் பாலாஜிக்கு 45 வயது ஆகிறது. இவர் சின்னத்திரையில் துணை நடிகராக பணியாற்றி வருகிறார். கோபிநாத்தின் முதல் மனைவி லலிதா மற்றும் மகள் வசந்தி ஆகியோர் 1978-ம் ஆண்டு இறந்து விட்டார்கள். இந்த நிலையில் பாலாஜி தனது பெரியம்மா மற்றும் அக்காளுக்கு இறப்பு சான்றிதழ்கள் கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனு மீது சேலம் பெரியேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரணை நடந்தது . இதையடுத்து பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலரான பெரமனூரை சேர்ந்த 45 வயதாகும் ராஜசேகர் என்பவரை சந்தித்து மனுவின் நிலை குறித்து கேட்டாராம். அப்போது அவர் இந்த மனுக்களை பரிசீலித்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்புவதற்கு பாலாஜியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, இதுகுறித்து நேற்று சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின் பேரில் பாலாஜி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், நல்லம்மாள் தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். சின்னத்திரை துணை நடிகரிடம் இறப்பு சான்றிதழ்கள் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications