Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து! ஜனநாயகம் தோற்றுவிட்டது! அன்புமணி ஆதங்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியதற்கு பதில் ஏலம் விட்டிருக்கலாம் என அன்புமணி கூறுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து என்றும் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கில் பாமக போட்டியிடவும் இல்லை, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;

இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து

இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து

''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து. இந்த கூத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து. இது ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை தேடித் தந்துள்ள இடைத்தேர்தல். அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முமாமிட்டிருந்ததால் கடந்த ஒரு மாத காலம் தமிழகம் ஸ்தம்பித்தது. ஆட்சி நிர்வாகம் தேக்கமடைந்தது.''

ஏலம் விட்டிருக்கலாம்

ஏலம் விட்டிருக்கலாம்

''தேர்வில் காப்பி அடித்தாலும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் போல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம். இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என தெரியாது, ஆனால் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பது மட்டும் உண்மை.''

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

''தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. இதனை தடுக்க முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
போதைப்பொ்ருட்கள் விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.'' தமிழ்நாட்டில் மது கடைகள் மூடப்படும் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்றார்.

போதை தெளிந்துவிட்டால்

போதை தெளிந்துவிட்டால்

''போதை தெளிந்துவிட்டால் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் திராவிட கட்சிகளுக்கு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பு. இந்த விலை உயர்வை ஏற்க முடியாது என்பதோடு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அன்புமணி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+