நடு ராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. கதவை ஓங்கி ஓங்கி தட்டி.. சேலம் அருகே மக்கள் டென்ஷன்!
சேலம் அருகே இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிகிறார்
Recommended Video
சேலம்: நடுராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. யார், என்னன்னே தெரியலயாம். பயந்து போன பொதுமக்கள் போலீஸ்கிட்ட புகார் அளித்துள்ளனர்.
சேலம், அம்மாப்பேட்டையில் கொஞ்ச நாளாகவே யாரோ நடுராத்திரி கதவை தட்டுகிறார்களாம். மெதுவா கூட இல்லை.. வேக வேகமாக தட்டவும், தூங்கி கொண்டிருப்பவர்கள் பதறியடித்து ஓடிவந்து பார்த்தால், யாருமே இருப்பதில்லையாம்.
முதலில் இதை பேய், பிசாசோ என்று நினைத்து பயந்துள்ளனர். அதன்பிறகு எல்லாருமே வீட்டு கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று சொல்லவும்தான் வேண்டுமென்றே இது செய்யப்படுவதாக நினைத்தார்கள். இதனால் பொதுமக்கள் போலீசாரிடம் சென்று புகார் சொல்லி உள்ளனர். இதையடுத்து போலீசாரும், அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு மர்ம நபர், நள்ளிரவுகளில் ஒவ்வொரு தெருவிலும் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கிறார். பிறகு வீடு வீடாக செனறு கதவை தட்டி விட்டு ஓடி விடுகிறார். அது மாடி வீடாக இருந்தாலும் சரி, படியேறி சென்று மாடி வீட்டை கதவை தட்டுகிறார்.
அடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு
பிறகு அங்கிருந்து ஜம்ப் ஆகி பக்கத்து மாடிக்கு குதிக்கிறார். ஒருவேளை வீட்டின் கதவு திறந்திருந்தால், அங்கு போவதே இல்லை. இந்த நபர் சட்டையை கழட்டி கையில் வைத்து கொண்டுள்ளார். ஒரு சுருட்டை பற்ற வைத்து கொண்டு ஊதிக்கொண்டே தெருவெல்லாம், ஓடுவதும், நிற்பதும், குதிப்பதுமாகவே இருக்கிறது.
இந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், வீடு புகுந்து திருட முயற்சிக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.