அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 பொங்கல் பரிசு - முதல்வர் அறிவிப்பு
சேலம் : தை பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதலில் ரொக்கமாக ரூ.2500 வழங்கப்படும். இதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 50 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொரோனா காலமாக இருப்பதால் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தை திருநாளுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் தேர்தல் காலமாக இருப்பதால் ரூ. 2500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது அறிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications