ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா?.. எடப்பாடிக்கு துரைமுருகன் கேள்வி
சேலம்: முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு விட்டுக் கொடுக்கத் தயாரா என எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பொது கணக்கு குழுத் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் எல்லோரும் முதல்வர் பதவிக்கு வரலாம் என எடப்பாடி பழனிச்சாமி ஆத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்படியெனில் ஏற்கெனவே முதல்வராக இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் பதவியை எடப்பாடி விட்டுக் கொடுக்க தயாரா.
திமுகவை வாரிசு அரசியல் என்கிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து வந்தால் மட்டும்தான் அது வாரிசு அரசியலா. நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றோர் வீட்டிலிருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications